Saturday, June 4, 2011

மரபணு மூலம் உருவாக்கப்பட்ட வெள்ளரிக்காய் ; 17 பேர் பலி, 1500 பேர் பாதிப்பு.


மரபணு மாற்றப்பட்ட காய்கறி - பழங்களில் பாக்டீரியா கிருமிகள் சேர்க்கப் படுகின்றன. காய்கறி - பழங்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும், மாதக் கணக்கில் வைத்திருந்தாலும் புதிதாக விளைந்தது போல் இருப்பதற்கும் இவை சேர்க்கப்படுகிறது. கத்தரிக்காயில் “கிரை-1 ஏசி” என்ற பாக்டீரியா சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுவதால் அது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறி நம்நாட்டில் போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து மரபணு கத்தரிக்காய் விளைவிக்க இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனாலும் சர்வதேச விதை நிறுவனங்களை சேர்ந்த இந்திய வேளாண்மை விஞ்ஞானிகள் மரபணு காய்கறி-பழங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்பெயினில் விளைவிக்கப்பட்ட வெள்ளரிக்காய் சாப்பிட்ட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 16 பேர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். இன்னொருவர் சுவீடனை சேர்ந்தவர். ஸ்பெயினில் வெள்ளரிக்காய் தற்போது ஏராளமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த வெள்ளரிக்காய் சாப்பிட்ட 9 நாடுகளை சேர்ந்த 1500 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் ஏராளமான உயிர்களை பறித்து வரும் ஸ்பெயின் வெள்ளரிக்காய்க்கு ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

ஆஸ்திரியா நாடு ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு, பெரிய மஞ்சள் வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்து மரபணு மாற்றப்பட்ட காய்கறி- பழங்களுக்கும் தடை விதித்துள்ளது. ஜெர்மன் மருத்துவ விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயில் உயிரிழந்தவர்களிடம் நடத்திய பரிசோதனையில் “இ-கோலி” என்ற கொடிய பாக்டீரியா இருப்பதை கண்டறிந்தனர்.

இதையறிந்ததும் ஜெர்மனி நாட்டு சுகாதார மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் நாடு முழுவதிலும் ஸ்பெயின் காய்கறி-பழங்கள் விற்க தடை விதித்தனர். அவற்றை பொதுமக்களுக்கு விற்க கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஸ்பெயின் வெள்ளரிக்காயை பரிசோதித்த இங்கிலாந்து நுண்ணுயிரியல் விஞ்ஞானி ரோன்கூட்லர் கூறும்போது, இந்த வெள்ளரிக்காயில் இ-கோலி போன்று வேறு சில கொடிய கிருமிகளும் உள்ளன. இதை யாராவது சாப்பிட்டால் இதில் உள்ள கிருமிகள் நேரடியாக சிறுநீரகத்தை தாக்கி செயலிழக்க செய்து விடும்.

இதற்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம் என்றார். ஜெர்மனியில் உள்ள ஷம்பர்க் நகரில் மட்டும் ஸ்பெயின் வெள்ளரிக்காய் சாப்பிட்ட 467 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த போது சிறுநீரகம் தொற்று கிருமிககளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உயிருக்கு உலை வைக்கும் ஸ்பெயின் வெள்ளரிக்காய் மரபணு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஜெர்மனி, டென்மார்க், செக் குடியரசு, லக்கம்பார்க், ஹங்கேரி, ஸ்வீடன், பெல்ஜியம் போன்ற நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

முறையான பரிசோதனை எதுவும் செய்யப்படாத வெள்ளரிக்காய் போன்ற காய்கறி-பழங்கள் தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த ஸ்பெயினுக்கு அந்நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரான்ஸ் நாட்டு சுகாதார மந்திரி கூறும்போது, *ஸ்பெயின் நாட்டில் எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெள்ளரிக்காய் விளைவிக்கப்பட்டது என்பதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

வெள்ளரியில் இ-கோலி பாக்டீரியா எப்படி கலந்து என்பதையும் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளரிக்காயில் இ-கோலி பாக்டீரியா கலந்திருப்பதாக பீதி பரவியதால் உலகம் முழுவதிலும் சாலட் விற்பனை பெருமளவு குறைந்தது.

No comments: