கனிமொழிக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ ஆட்சேபம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம் தெரிவித்தார்.
முன்னதாக கனிமொழியும், சரத்குமாரும் இன்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவரும் சிபிஐ தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
கனிமொழி சார்பாக ராம் ஜேத்மலானி நீதிமன்றத்தில் ஆஜரானார். சரத்குமார் சார்பாக வழக்கறிஞர் அல்தாப் அகமது வாதாடினார்.
இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம் தெரிவித்தார்.
தனது முன்ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ அதன் வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என கனிமொழி சார்பாக நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக கனிமொழியும், சரத்குமாரும் இன்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இருவரும் சிபிஐ தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
கனிமொழி சார்பாக ராம் ஜேத்மலானி நீதிமன்றத்தில் ஆஜரானார். சரத்குமார் சார்பாக வழக்கறிஞர் அல்தாப் அகமது வாதாடினார்.
இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம் தெரிவித்தார்.
தனது முன்ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ அதன் வாதங்களை இன்றே முடிக்க வேண்டும் என கனிமொழி சார்பாக நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் மதிய உணவு சாப்பிட்ட கனிமொழி.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்பி கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமாரும் தில்லி பாட்டியாலா வளாகத்தில் உள்ள 113-வது சேம்பரில் மதிய உணவு அருந்தினர்.
கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தொடர்பான விசாரணை பிற்பகலுக்குப் பின்னரும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தொடர்பான விசாரணை பிற்பகலுக்குப் பின்னரும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கனிமொழி முன்ஜாமீன் மனு : நாளையும் விசாரணை தொடரும்.
கனிமொழி சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியும், சரத்குமார் சார்பாக அல்தாப் அகமதுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
எனினும் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பான விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நாளை 10 மணிக்கு மீண்டும் இந்த மனுக்களின் மீது விசாரணை நடைபெறும்.
எனினும் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பான விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நாளை 10 மணிக்கு மீண்டும் இந்த மனுக்களின் மீது விசாரணை நடைபெறும்.
விசாரணை ஒத்திவைப்பு:
வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டதால் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார் கனிமொழி
விசாரணையின்போது கனிமொழி பதற்றம் இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டார். அவரது கணவர் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் பேசியவாறு புன்னகைத்தபடி இருந்தார்.
விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது உடல்நலக்குறைவு காரணமாக திமுக எம்பி ஆதிசங்கர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். மற்ற அனைவரும் பதற்றமின்றியே காணப்பட்டனர்.
விசாரணையின்போது கனிமொழி பதற்றம் இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டார். அவரது கணவர் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் பேசியவாறு புன்னகைத்தபடி இருந்தார்.
விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது உடல்நலக்குறைவு காரணமாக திமுக எம்பி ஆதிசங்கர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். மற்ற அனைவரும் பதற்றமின்றியே காணப்பட்டனர்.
No comments:
Post a Comment