Friday, May 6, 2011

இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல் : அமெரிக்கா போல தாக்குதல் நடத்த நினைத்தால்......


அமெரிக்காவின் அடிவருடியாக வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான், அமெரிக்க ஆயுதங்களை குப்பைபோல குவித்து வைத்திருக்கிற தைரியத்தில் பிற நாடுகளை மிரட்டிப் பார்க்கிறது.

பின்லேடன் பாகிஸ்தானில் இல்லையென்றும், அவன் இறந்து போய்விட்டான் எனவும் இருவேறு மாற்றுக் கருத்துகளை பாகிஸ்தான் கூறிவந்த நிலையில், பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்துக்கு தெரியாமலேயே அந்த நாட்டுக்குள் புகுந்த அமெரிக்க ராணுவத்தினர் பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மற்றும் அவனது கூட்டாளிகளை சுட்டுக் கொன்று கடலில் வீசியெறிந்து ஒரு சகாப்தத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தனர். இதனால், உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்துள்ளன.

திகைத்துப் போனது பாகிஸ்தான். அமெரிக்காவிற்கு எதிராக, அதன் அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுக்க துணியாத அல்லது முடியாத தைரியசாலிதான் பாகிஸ்தான் இது அமெரிக்க துணையோடு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளை மிரட்டிப் பார்க்கிறது.

பின்லேடனை சுட்டுக்கொல்ல அமெரிக்கா நடத்தியது போலவே தன்னிச்சையாக தாக்குதல் நடத்த இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகள் முயற்சித்தால் பயங்கரமான பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரிக்கிறது.

இதற்கிடையே, இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், `பின்லேடனை கொல்ல அமெரிக்க சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலை போலவே தாக்குதல் நடத்தும் சக்தி இந்திய ராணுவத்துக்கும் உள்ளது' என தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷிர் நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர், எங்களுடைய நாட்டில் வீரம் மிகுந்தவர்கள் அதிகமாக உள்ளனர். ( அமெரிக்காவிற்கு எதிராக இவர்களின் வீரம் மிகுமா? மிகாதா? )

இப்போது நடந்தது போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறும் என்ற ரீதியில் எல்லைக்கு அப்பால் இருந்து கொண்டு ராணுவம், விமானப்படை போன்றவற்றின் மூத்த அதிகாரிகள் கூறி வருகின்றனர். அது போன்ற சம்பவம் அல்லது தவறான கணக்கீடால் தாக்குதல் நடைபெற்றால் மிகப்பயங்கரமான பேரழிவு ஏற்படும்.

எந்த வகையிலாவது தன்னிச்சையான தாக்குதலை நடத்த எந்தவொரு நாடும் நினைத்தால் அது தவறானதாக அமையும்.

பாகிஸ்தானை பாதுகாக்கும் வகையில் ராணுவம் வலிமையாக இருக்கிறது. பாகிஸ்தானில் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத தலைவர்களை கொல்ல தாக்குதல் நடத்தப்போவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுவது கவலையான விஷயம். இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் கொள்கையை திசை திருப்பும் வகையில் சில சக்திகளும், அதிகாரிகளும் அறிக்கை வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது.

உள்துறை செயலாளர்கள் மட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் நல்ல முறையாக பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

தீவிரவாத ஒழிப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போன்றவற்றில் இரு நாடுகளும் கூட்டாக செயல்பட பேச்சு நடந்தது. எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம். மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலானது இந்திய தரப்பின் உளவுத்துறை தவறு அல்லது பாதுகாப்பு தவறு என்றே கருத வேண்டும்.

அபோதாபாத்தில் நடந்த தாக்குதலின்போது, அதிர்ஷ்டவசமாக பெரிய துயரம் நடைபெறவில்லை. ஏனெனில், அந்த பகுதியில் சில ஹெலிகாப்டர்கள் பறப்பதாக தகவல் அறிந்து பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானங்கள் இரண்டு புறப்பட்டு சென்றன.

அல்கொய்தா அமைப்புடன் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது எளிது. ஆனால், அந்த கருத்துகள் பொய்யானவை. அல்கொய்தா மற்றும் தலீபான் தீவிரவாத தலைவர்களை அமெரிக்கா கைது செய்வதற்கு ஐ.எஸ்.ஐ. உதவி செய்துள்ளது என்று தெரிவித்தார்.

தீவிரவாதத்தின் பிறப்பிடமாக, சில அமைப்புகளுக்கு இருப்பிடமாக பாகிஸ்தான் இருக்கும் வரையில், அமெரிக்காவின் காலைகழுவிக் கொண்டு, அதன் உள்ஆதரவோடு பிறநாடுகளிடம் தனது சீற்றத்தை இப்படித்தான் காட்டிக் கொண்டிருக்கும்.

1 comment:

adotdeeban said...

Boss Neenga ethuvum comedy pannaliye, nammalala thammathundu srilankavaye onnum pudunga mudiyila. Ithula pakistan mela kai vakkiratha avan nuclear weapon lam vachirukanam.