Friday, May 6, 2011

கனிமொழி கோர்ட்டில் ஆஜர்.


ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி எம்.பி. ஆஜரானார். கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளர் என்று கனிமொழியை குற்றம்சாட்டி இரண்டாம் முறையாக குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

இதையடுத்து மே 6 ல் ஆஜர் ஆகும்படி கனிமொழிக்கு, நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதை ஏற்று, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று முன்தினம் டில்லிக்கு சென்றார் கனிமொழி.

இன்று காலை பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக கனிமொழி ஆஜராகியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜர் ஆகியுள்ளார்.

No comments: