Friday, May 6, 2011

அதிகாலையில் 2 ரொட்டி துண்டுகள், டிபனுக்கு 2 சப்பாத்திகள் : ஆ.ராசா, கல்மாடியின் ஜெயில் வாழ்க்கை.

அதிகாலையில் 2 ரொட்டி துண்டுகள், டிபனுக்கு 2 சப்பாத்திகள்: ஆ.ராசா, கல்மாடியின் ஜெயில் வாழ்க்கை

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, சுரேஷ்கல்மாடி ஆகியோர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அரண்மனை போன்ற வீடுகள், ஆடம்பர விருந்துகள், எடுபிடிக்கு பலபேர், சொகுசு மெத்தையில் ஹாயான தூக்கம் என அத்தனை வசதிகளையும் அனுபவித்து பழக்கப்பட்ட இவர்களின் வாழ்க்கை முறை திகார் ஜெயிலில் அடியோடு மாறிவிட்டது.

இரவில் ஒரு போர்வையின் மீது மட்டுமே படுத்து உறங்குகிறார்கள். சிறைக்குள் இந்த வி.வி.ஐ.பி.க்களின் ஒவ்வொரு பொழுதும் அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சி கூடம், நூலகத்துக்கு அனுப்புவதில்லை.

காலை 6.30 மணிக்கு ஒரு கப் டீயும், 2 ரொட்டி துண்டுகளும் கிடைக்கும். பொத்தானை அமுக்கினால் வந்து நிற்கும் ஏவலாளை அனுப்பி வேண்டியதை வாங்கி சாப்பிட்டு பழக்கப்பட்ட இவர்கள் 2 ரொட்டி துண்டுக்கும், ஒரு கப் டீக்கும் வரிசையில் நிற்க வேண்டும்.

காலை 9 மணிக்கெல்லாம் குளித்து தயாராகிவிட வேண்டும். இரண்டே இரண்டு சப்பாத்திகள் டிபனுக்கு கிடைக்கும். கொஞ்சம் சாதம், பருப்பு, காய்கறி பொரியல் கிடைக்கும். அதை மதிய உணவாக காலை 9 மணிக்கே வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

நண்பகலில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் மாலை 3 மணி வரை சிறை அறைகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்கள் படிக்கலாம், தொலைக்காட்சி பார்க்கலாம். மாலை 3 மணிக்கு 2 பிஸ்கட்டும் ஒரு கப் டீயும் வழங்கப்படும்.

மாலை 6 மணிக்கெல்லாம் இரவு உணவை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மீண்டும் சிறைக்குள் அடைக்கப்படுவார்கள். இந்த ஜெயில் அனுபவம் வி.வி. ஐ.பி.க்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

No comments: