Saturday, May 7, 2011

பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்குதல.


பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்குதல், மற்றும் ஆளில்லா விமானம் மூலமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் வடக்கு வாசிரிஸ்தான் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் இரண்டு முறை நடத்தியதில் 17 தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.

பின்லேடன் கொல்லப்பட்ட துயரத்தில் இருந்த தாலிபான்கள் இந்த தாக்குதலால் பெருங்கொந்தளிப்பிற்கு ஆளானார்கள்.

அமெரிக்காவின் மகிழ்ச்சி நீடிக்காது; அது விரைவில் சோகத்தை தழுவும்.

அமெரிக்காவையும், உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் அமெரிக்கர்களின் உயிர் களையும் சாபமாய் அல்கொய்தா துரத்தும். என்று பகிரங்கமாக அறிவித்தனர்.

மேலும் பின்லேடன் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டு, உறுதி செய்த அல்கொய்தா, விலைமதிப்பில்லாத பின்லேடன் இரத்தத்திற்கு, அமெரிக்கா பழிவாங்கப்பட்டு பலியாகும். என்று அறிவித்தனர்.

ஆளில்லா விமானம் மூலமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது.

இம்முறை பாகிஸ்தான் தலைநகரமான பாக்தாத் மீது ஆளில்லா விமானம் மூலமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது இதில் 21பேர் கொல்லப்பட்டனர்.

அதிர்ச்சியில் பாகிஸ்தான்.

பின்லேடன் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் பாகிஸ்தான் செய்வதறியாது உறைந்து போயிருந்தது. அமெரிக்காவின் அத்துமீறல் ஒருபுறம். இஸ்லாமியர்களின் குமுறல் மறுபுறம்.

இஸ்லாமிய முறைப்படி பின்லேடன் உடல் அடக்கம் நடைபெறவில்லை என்றும், இது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியருக்கு அமெரிக்கா செய்த துரோகம் என்று குற்றம்சாட்டி குமுறியது அல்கொய்தா.

இந்நிலையில் பாகிஸ்தானில் பின்லேடன் தங்கியிருந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப் படஉள்ளது.

இந் நிகழ்வுகளால் பின்லேடன் இருந்த இடம், வாழ்ந்த இடம், இறந்த இடம், உடல் புதைக்கப் பட்ட இடம், என்று எதுவும் அவன் நினைவாக இருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பது தெளிவாகிறது.


No comments: