Saturday, May 7, 2011

விமானிகள் வேலைநிறுத்தம் வாபஸ் : 800 விமானிகள் இரவு முதல் வேலைக்கு திரும்புவதாக அறிவிப்பு.


10 நாட்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது, ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, விமானிகள் வேலைக்கு திரும்பினார்கள்.

ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கிடையே சீரான சம ஊதியம், நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா விமானிகள் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

மத்திய அரசின் எந்தவித மிரட்டலுக்கும் விமானிகள் பணியவில்லை. மாறாக கைதுக்கும் நாங்கள் தயார் எனும் ரீதியில் போராட்டக் களம் இருந்த்து.

இந்த நிலையில், விமானிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கும், விமானிகள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே 5 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரவு 10 மணி்க்கு உடன்பாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, விமானிகள் கடந்த 10 நாட்களாக நடத்தி வந்த தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இதனால் 800-க்கும் அதிகமான விமானிகள் இரவு முதல் வேலைக்கு திரும்புவதா கவும் கூறினார்.

அரசாங்கத்தின் யோசனையை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதற்காக விமானிகளுக்கு நன்றி தெரிவித்தார் விமான போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவி.

விமானிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து 3 பேர் கமிட்டி பரிசீலித்து 3 மாதங்களில் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்றார்.

No comments: