
பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் மக்கள் வரியாக செலுத்தும் பணத்தை ஊழல்வாதிகள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டது.
எனவே ஊழலை ஒழிக்க வேண்டும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர வேண்டும்.
கறுப்பு பணத்தை வைத்திருப்போர் மீது தேச துரோக வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன் வைத்து, வரும் ஜுன் மாதம் 4-ந் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
எங்களுடைய இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.
No comments:
Post a Comment