Thursday, May 5, 2011

இன்னும் 50 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்.

50 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

உலக மக்கள் தொகை பற்றிய ஆய்வு ஒன்றை ஐ.நா சபை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில், அதாவது 2060-ம் ஆண்டு 170 கோடியைத் தாண்டும். 2030-ம் ஆண்டு, இந்திய ஜனத்தொகை உலக நாடுகளிலேயே அதிகமாக இருக்கும். பின்னர் மக்கள் தொகை விகிதம் படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும் 2060-ம் ஆண்டு, இந்திய மக்கள் தொகை 170 கோடி இருக்கும். 2025-ம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை 140 கோடியைத்தொடும். இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக ஜனத்தொகை 930-ம் கோடியாக இருக்கும்.

2100-ம் ஆண்டு இது 1000 கோடியைத் தாண்டும். இந்த வருடம் அக்டோபர் 31-ம் தேதி பிறக்கும் முதல் குழந்தை, உலக மக்கள் தொகையின் 700-வது கோடி ஆளாக கணக்கிடப்படுவார். இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: