Thursday, May 5, 2011

மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் : பாகிஸ்தான்.


தங்கள் மண்ணில் எந்த நாடாவது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் எச்சரிக்கை விடுத்தார்.

தவறாக கணக்கு போட்டால் பேரழிவு ஏற்படும். தன்னை பாதுகாத்துக் கொள்ள போதுமான தகுதி பாகிஸ்தானிடம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என பஷீர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் அபோட்டாபாதில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றன. இது பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு தெரியாமல் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவம் நடந்து 3 தினங்களுக்குப் பின் சல்மான் பஷீர் இதுகுறித்து பேசினார்.

ஐஎஸ்ஐயோ, அரசு அமைப்புக்குள் உள்ள சக்திகளோ அல் காய்தாவுடன் சேர்ந்து செயல்பட்டது என்று சொல்வது சுலபம். இது தவறான கருத்து. தவறான குற்றச்சாட்டு. இதை எந்தநிலையிலும் உறுதிப்படுத்த முடியாது என பஷீர் குறிப்பிட்டார்.

No comments: