Thursday, May 5, 2011

தமிழகத்தில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை 2.11 லட்சம் ; தேர்தல் கமிஷன் அறிவிப்பு.

தமிழகத்தில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை 2.11 லட்சம்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் தபால் ஓட்டுகளுக்காக 2 லட்சத்து 11 ஆயிரத்து 580 வாக்குச்சீட்டுகளை தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது.

தமிழகத்தில் தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகளை `சர்வீஸ்' வாக்காளர்கள், `நான்-சர்வீஸ்' வாக்காளர்கள் மற்றும் தடுப்புக்காவல் கைதிகள் ஆகியோருக்கு தேர்தல் கமிஷன் அனுமதித்துள்ளது.

தேர்தல் கமிஷன் அளித்துள்ள வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கையின் (மாவட்ட வாரியான) விபரம் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம்-7,455 வாக்குச்சீட்டுகள், சென்னை-6,453, காஞ்சீபுரம்-5,236, வேலூர்-18 ஆயிரத்து 941, கிருஷ்ணகிரி-7,286, தர்மபுரி-4,870, திருவண்ணாமலை-10ஆயிரத்து 674, விழுப்புரம்-10ஆயிரத்து 146, சேலம்-9,383, நாமக்கல்-5,548, ஈரோடு-4,855, நீலகிரி-3,400, கோவை-6,630, திண்டுக்கல்-7,025, கரூர்-3,276, திருச்சி-7,464 பெரம்பலூர்-2,011, கடலூர்-6,485, நாகை-4,927, திருவாரூர்-4,195, தஞ்சாவூர்-7,457, புதுக்கோட்டை-4,424, சிவகங்கை-4,164, மதுரை-12 ஆயிரத்து 176, தேனி-7,453, விருதுநகர்-2,438, ராமநாதபுரம்-3,988, தூத்துக்குடி-5,558, நெல்லை-10 ஆயிரத்து 114, கன்னியாகுமரி-10ஆயிரத்து 512, அரியலூர்-2,359, திருப்பூர்-4,675.

தடுப்புக் காவல் கைதிகள் 51 பேருக்கு தபால் ஓட்டுக்கான வாக்குச்சீட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் தமிழகத்துக்கு தபால் ஓட்டுக்காக 2 லட்சத்து 11 ஆயிரத்து 580 வாக்குச்சீட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

No comments: