
பாகிஸ்தானில் அபோதா பாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடனை கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு சுட்டுக்கொன்றனர். பின்லேடனுடன் அவரது மகன் காலித் மற்றும் மகள் உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் 3 ஆண்கள் யார் என்று இது வரை அடையாளம் காணப்படவில்லை.
இதற்கிடையே பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக அரேபிய தொலைக்காட்சிகள் பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டப்படி உள்ளன. நேற்று பின்லேடனின் 12 வயது மகள் தெரிவித்ததாக ஒரு தகவலை அரேபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அமெரிக்க கமாண்டோ வீரர்கள் பின்லேடனை உயிருடன் பிடித்ததாகவும், அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்தே சுட்டுக் கொன்றதாகவும் தெரிய வந்துள்ளது. தன் கண் எதிரில் தனது தந்தையை அமெரிக்கர்கள் சுட்டுக் கொன்றதாக அவர் கூறி உள்ளாள்.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது, பங்களாவின் மற்ற அறைகளில் 12 பெண்கள் இருந்தனர். அவர்களை அமெரிக்கர்கள் எதுவும் செய்யவில்லை என்று பின்லேடன் மகள் கூறி உள்ளார். பின்லேடன் மகள் கொடுத்துள்ள இந்த வாக்கு மூலம் காரணமாக பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது முழுமையாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment