Thursday, May 5, 2011

தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் நடிகை குஷ்புவுக்கு தேனி போலீசார் சம்மன்/


தேனி மாவட்டத்தில் மட்டும் தேர்தல் விதிமுறையை மீறியதாக 260 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளது. இதில் 210 வழக்குகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 40 வழக்குகள் விசாரணையில் உள்ளது. மீதமுள்ள 10 வழக்குகளுக்கு தண்டணை பெறப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் அனைத்தும் போலீஸ் நிலைய ஜாமீனில் வெளிவரக்கூடியவை என்பதால் கைது செய்து ஜாமீனில் போலீசார் விட்டுள்ளனர்.

நடிகை குஷ்பு தேனி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோது பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும், தேர்தல் விதிமுறையை மீறியதாகவும் பழனிசெட்டிபட்டி மற்றும் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையங்களில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

குஷ்பு வெளியூரை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தேனி மாவட்ட போலீசார் சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நடிகை குஷ்பு தேனி போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments: