Friday, May 27, 2011

ஒரே மார்க் எடுத்த இரட்டை சகோதரிகள்.

புதுவை கதிர்காமம் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் வீனா-மீனா.

இரட்டையர்களான இவர்கள் 2 பேரும் 10-ம் வகுப்பு தேர்வில் ஒன்றுபோல் தலா 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும் அரசு பள்ளிகளில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்றது குறித்து அந்த மாணவிகள்,

’’நாங்கள் 2 பேரும் ஒரே மாதிரியாக இருப்போம். 2 பேருமே நன்றாக படிப்போம். நாங்கள் பள்ளியில் எப்போதும் ஒன்றுபோல் மதிப்பெண்கள் பெறுவோம். 10-ம் வகுப்பு தேர்விலும் சாதனை படைக்க வேண்டும் என்று திட்டமிட்டு படித்தோம். தேர்வில் 2 பேரும் ஒன்றுபோல் மதிப்பெண்கள் பெற்றுள்ளோம்.

நாங்கள் சாதனை படைக்க எங்கள் பெற்றோரும், ஆசிரியர்களும் அதிக ஊக்கம் அளித்தனர். எனவே, நாங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளோம் என்று கூறினார்கள்.

No comments: