Friday, May 27, 2011

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஒரு பார்வை.


பத்தாம் வகுப்பு தேர்வு: 85.3 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 85.30 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த 10ம் வகுப்பு தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 85.3 சதவீதம்பேர் தேர்ச்சியுற்றனர். பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 சதவீதம் அதிகம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இவர்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வழக்கம் போல மாணவியரை விடக் குறைவாகும்.

மாணவியர் தேர்ச்சி 88.10%,


மாணவர்கள் தேர்ச்சி 82.30%


ஐந்து பேர் முதலிடம்.


10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. 500க்கு 496 மதிப்பெண்களுடன் முதலிடத்தை ஐந்து பேர் பிடித்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:.


முதலிடம் பிடித்தவர்கள்


1.மின்னலாதேவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.

2.நித்யா,
எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.

3.ரம்யா,
ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபி
செட்டிப்பாளையம்.


4.சங்கீதா,
முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, பெரியயேரி, சேலம்.

5.ஹரிணி,
அவர்லேடி மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர், சென்னை.


11 பேர் 2வது இடம்


500க்கு 495 மதிப்பெண்களைப் பெற்று 11பேர் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர் அவர்கள் விவரம் வருமாறு:


1. ஏ.சதாம் உசேன், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம்.

2. வி.பாக்யஸ்ரீ, ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

3. பி.அருண்ராஜா, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, அபிராம், பரமக்குடி.

4. ஜெ.ஜெயப்பிரியா, எஸ்.எச்.என். இதெல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.

5.டி.ஹரிபாரதி, நாடார் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.

6.எம்.பொன்மணி,எஸ்.ஆர்.பகத்பெண்கள்மேல்நிலைப்பள்ளி,ராஜபாளைம்

7.என்.எம்.கார்த்திக், புனிதமேரி மேல்நிலைப்பள்ளி, மதுரை.

8.ஏ.சுபலட்சுமி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, செல்லபெருமாள் பேட்டை, புதுச்சேரி.

9.வி.சீனிரதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை, சென்னை.

10.எம்.புவனா, விஜயந்தா மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை.

11.ஆர்.சுஷ்மிதா, பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி, சென்னை


24 பேருக்கு 3வது இடம்


500க்கு 494 மதிப்பெண்களைப் பெற்று 24பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்அவர்கள் விவரம் வருமாறு:


1. நிம்ருதா (494), செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்.

2.கே.லட்சுமி பிரியா (494), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, வடசேரி, நாகர்கோயில்.

3.ஜே.உமா(494), எஸ்.எச்.என். எதேல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சாத்தூர், அருப்புக்கோட்டை.

4.லலித் செல்லப்பா கார்ப்பென்டர்(494), பி.ஏ.சி.எம்., மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம்.

5.குங்குமால்யா (494), எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டை.

6.பி.எம்.இந்து (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கவிந்தாபாடி, கோபிச்செட்டிப்பாளையம்.

7.எஸ்.ஹரிபிரபா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்.

8.ஏ.ஷோபனா (494), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்

9.எஸ்.அசோக்குமார் (494), எஸ்.வி.வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தாசம்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்.

10.என்.லோகேஷ்குமார் (494),ஜி.வி.மேல்நிலைப் பள்ளி,மாசிலாபாளையம் சங்ககிரி.

11.கே.விக்னேஸ்வரி (494), வெற்றி விகாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரனூர், நாமக்கல்.

12.கே.காவ்யா (494), அரசு மேல்நிலைப்பள்ளி, காரிமங்கலம், தருமபுரி.

13.என்.செந்தில்குமார் (494), சேரன் மேல்நிலைப் பள்ளி, புன்னம்சத்திரம், கரூர்.

14.எஸ்.ஜெயப்பிரகாஷ் (494), ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

15.எம்.ஜோதீஸ்வரன் (494), ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

16.எஸ்.காயத்ரி (494), அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை.

17.ஏ.பவித்ரா தேவி (494), ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

18.சி.அபிநயா (494), கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர்.

19.ஜே.ஷைனி (494), மௌன்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி, தியாகதுர்கம், விழுப்புரம்.

20. எம்.ஷபனா பேகம் (494), செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்.

21.இ.தனசேகர் (494), டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

22.எச்.சங்கீதா (494), செயின்ட் ஆன்டனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம்.

23.ஜே.தாமோதரன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை

24. எஸ்.ஐயப்பன் (494), பி.ஏ.கே. பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, சென்னை


தமிழில் நூற்றுக்கு நூறு சாதனை.

உத்தமபாளையம் இசட்கேஎம் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியங்கா தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார்.

இந்த முறை கணிதத்தில்தான் அதிக அளவிலானோர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

கணிதத்தில் 12,532 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

அறிவியலில் 3677 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.


சமூக அறிவியலில் 756 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.

No comments: