Friday, May 27, 2011

ஐதராபாத்தில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து.

ஐதராபாத்தில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் பத்தினா சகோதரர்கள் சார்பில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 8, 9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஐதராபாத்தில் உள்ள நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் ஆஸ்துமா நோய்க்கு மருந்து வழங்கப்படுகிறது.

இதுபற்றி பத்தினா சகோதரர்கள் கூறும்போது, "ஆஸ்துமா நோய்க்கு நாங்கள் ஆண்டுதோறும் மீன் மருந்தை அளித்து வருகிறோம். இம்மருந்தால் ஏராளமான நோயாளிகள் குணமாகி உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டும் லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்படும். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு கட்டைகள் அமைக்கப்படும்'' என்றனர்.

No comments: