Friday, May 27, 2011

ரஜினிகாந்த் முகம்காட்டுவாரா? : போயஸ்கார்டனில் பரபரப்பு.


நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார்.

இதற்காக அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து இன்று (27.5.2011) மாலை போயஸ்கார்டன் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னை விமான நிலையம் செல்கிறார் என்று ஒரு தகவல் வந்துள்ளதால் மீடியாக்காரர்கள் போயஸ்கார்டனில் குவிகிறார்கள்.

ராமச்சந்திராவில் இருந்தபடியே விமான நிலையம் செல்கிறார் என்றுஒரு தகவல் வந்துள்ளதால் அங்கேயும் மீடியாக்காரர்கள் குவிகிறார்கள்.

ரஜினிகாந்த் மீடியாவில் முகம் காட்டுவாரா? இல்லை முகம் காட்டாமலேயே விமானத்தில் ஏறிவிடுவாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.

No comments: