Wednesday, April 6, 2011

ராமதாஸின் பிரச்சாரப் பேச்சு.


ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை: ராமதாஸ் நம்பிக்கை.

எல்லா தரப்பு மக்களும் கருணாநிதிக்கே வாக்களிப்போம் என்று கூறி வருவதால், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கே சாத்தியமில்லை என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெ.அன்பழகனை ஆதரித்து அவர் இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியது:

"திமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. சில ஊடகங்கள்தான் ஆட்சி மாற்றம் வரும் என்று திரித்து கொண்டிருக்கின்றன. ஆட்சி மாற்றம் எப்படி வரும்? தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல; அரசியல் விழிப்பு உணர்வு பெற்றவர்கள்.

நான் எல்லா மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து வருகிறேன். எல்லா இடங்களிலும் மக்கள் மகிழ்ச்சியோடும் தெளிவோடும் இருக்கிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், மாணவர்கள் எல்லா தரப்பு மக்களையும் கேட்டால் முதல்வர் கருணாநிதிக்கு வாக்களிப்போம் என்கிறார்கள். அப்படியிருக்கும் போது, ஆட்சி மாற்றம் எப்படி வரும்?

கருணாநிதி எத்தனையோ சாதனைகள் செய்துள்ளார். ஜெயலலிதா இரண்டு முறை முதல்வராக இருந்தார். ஒரு துரும்பை கிள்ளி போட்டதுண்டா? அவரது ஆட்சியில் வேதனை தான் அதிகம்.
தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை தினம் தினம் புள்ளி விபரத்தோடு கூறி வருகிறோம்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நடிகர் தினமும் தள்ளாடி கொண்டு எதை எதையோ உளறுகிறார். பாவம் நடிகர் கட்சியின் தொண்டர்கள்.

படித்தவர்கள் 500 பேரிடம் கருத்து கேட்கிறார்கள். பொதுவாக படித்தவர்கள் அது சரியில்லை, இது சரியில்லை என்றுதான் சொல்வார்கள். இது கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. வெல்லப் போவது தி.மு.க. கூட்டணிதான். கருணாநிதி 6-வது முறையாக முதல்வராவது உறுதி," என்றார் ராமதாஸ்.

ஜெ. ஆட்சியில் வேதனை தான் அதிகம்: ராமதாஸ்.

ஜெயலலிதா 2 முறை முதல் அமைச்சராக இருந்தார். ஒரு துரும்பை கிள்ளி போட்டதுண்டா? அவரது ஆட்சியில் வேதனை தான் அதிகம் என, ராமதாஸ் பேசினார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஜெ.அன்பழகனை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்தார். திருவல்லிக்கேணியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வந்தேன். இந்த முறை ஜெ.அன்பழகனை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சில ஊடகங்கள்தான் ஆட்சி மாற்றம் வரும் என்று திரித்து கொண்டிருக்கின்றன. ஆட்சி மாற்றம் எப்படி வரும்? தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. அதி புத்திசாலிகள். அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள்.

கடந்த 5 ஆண்டுகள் கலைஞர் முதல் அமைச்சராக இருக்கிறார். இதுவரை 5 முறை முதல் அமைச்சராக இருந்துள்ளார். நான் எல்லா மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து வருகிறேன். எல்லா இடங்களிலும் மக்கள் மகிழ்ச்சியோடும், தெளிவோடும் இருக்கிறார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள், மாணவர்கள் எல்லா தரப்பு மக்களையும் கேட்டால் கலைஞருக்குத்தான் வாக்களிப்போம் என்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது ஆட்சி மாற்றம் எப்படி வரும்? கலைஞர் எத்தனையோ சாதனைகள் செய்துள்ளார். ஜெயலலிதா 2 முறை முதல் அமைச்சராக இருந்தார். ஒரு துரும்பை கிள்ளி போட்டதுண்டா? அவரது ஆட்சியில் வேதனை தான் அதிகம். தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை தினம் தினம் புள்ளி விபரத்தோடு கூறி வருகிறோம். தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய கூட்டணி. இந்த கூட்டணியில் நான், கலைஞர், சோனியா, திருமாவளவன் எல்லோரும் இன்று மாலையில் ஒரே மேடையில் பேசப் போகிறோம்.

அந்த கூட்டணியை நினைத்து பாருங்கள். அ.தி. மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள நடிகர் தினமும் தள்ளாடி கொண்டு எதை எதையோ உளறுகிறார். இப்படி ஒரு கட்சி. பாவம் நடிகர் கட்சியின் தொண்டர்கள். படித்தவர்கள் 500 பேரிடம் கருத்து கேட்கிறார்கள். பொதுவாக படித்தவர்கள் அது சரியில்லை, இது சரியில்லை என்றுதான் சொல்வார்கள். இது கருத்து கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு. இந்த பருப்பெல்லாம் வேகாது. வெல்லப் போவது தி.மு.க. கூட்டணிதான். கலைஞர் 6 வது முறையாக முதல் அமைச்சர் ஆவது உறுதி என்றார்.

காங்கிரசுக்காக தியாகம் செய்தோம்: ராமதாஸ்.

ராணிப்பேட்டை தி.மு.க. வேட்பாளர் காந்தி, ஆற்காடு பா.ம.க. வேட்பாளர் இளவழகன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் கலையரசு ஆகியோரை ஆதரித்து பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.

இதனையடுத்து விருபாட்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்,

மாற்று அணி என்பது நாளுக்கு நாள் கரைந்து கொண்டு காணாமல் போய் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள ஒரு நடிகரின் தள்ளாடிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசுகையில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயிலில் இருக்கிறார் என பேசியுள்ளார்.

அதற்கு அ.தி.மு.க.வினரே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது ஒருகட்சி, இதுக்கு ஒரு கூட்டணி. கலைஞர் வீட்டிற்கு சென்று முதன் முதலாக நான் தான் கூட்டணி அமைத்தேன். ஒரு மணி நேரத்தில் 31 தொகுதி என முடிவாகி இருவரும் கையெழுத்திட்டோம்.

காங்கிரஸ் கட்சிக்காக ஒரு தொகுதியை தியாகம் செய்தோம். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. மூன்றாவது பெரிய கட்சியாக பலம் பொருந்திய கூட்டணியாக திகழ்கிறது என்றார்.

நடிகரின் பேச்சால் தமிழகமே சிரிக்கிறது: ராமதாஸ்.

தடுமாறும் நடிகரின் பேச்சைக் கேட்டு தமிழகமே சிரிப்பாய் சிரிக்கிறது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க.,வேட்பாளர் சேகர்பாபு, பெரம்பூர் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டங்களில் பேசிய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,

தி.மு.க., கூட்டணி முடிவானதும் தலைவர்களை வாழ்த்திப் பேசிய கலைஞர், இது சமூக நீதிக்கான கூட்டணி என்றார். எதிரணி தடுமாறும் நடிகர் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது. நடிகரின் தடுமாறும் பேச்சைக் கேட்டு தமிழகமே சிரிப்பாய் சிரிக்கிறது. இளைஞர்கள் பலர் சேர்ந்ததும், கட்சி ஆரம்பித்த நடிகர், கோட்டை நாற்காலியில் அமர துடிக்கிறார். சினிமா எடுத்து அதில் முதல்வராக நடித்து, திருப்திப்பட வேண்டியது தான்.

தேர்தல் நேரத்தில் மட்டும் திட்டங்களை அறிவிப்பவர் ஜெயலலிதா. 10 ஆண்டுகள் பதவியில் இருந்தும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இனிமேலும் ஒன்றும் செய்யப்போவதில்லை. கருணாநிதி ஆட்சியில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். இலவசங்கள் கொடுக்க முடியாது என்றவர்கள், போட்டி போட்டு இலவசத்தை அறிவிக்கின்றனர். இது மக்களிடம் எடுபடாது. கருணாநிதி படிக்க உதவி செய்கிறார். ஜெயலலிதாவோ ஆடு, மாடு கொடுப்பேன் என்கிறார். எல்லாரும் இனி ஆடு, மாடு மேய்க்க வேண்டியது தான்.

தமிழகத்தில் வி.சி.,க்கள் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்துள்ளேன். இன்னும் ஒரு தொகுதியில் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது
. பா.ம.க., போட்டியிடும், 30 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.

1 comment:

அருள் said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html