Wednesday, April 6, 2011

சிங்கமுத்து ஓட்டம் - பிரச்சார கலாட்டா!


சிங்கமுத்து ஓட்டம்; வடிவேலு பொம்மை எரிப்பு! - பிரச்சார கலாட்டா!

தமிழக முதல்வர் கருணாநிதியைப் பற்றி தரக்குறைவாகப் பேச முயன்ற சிங்கமுத்துவை திமுகவினர் உதைக்க முயன்றதால், பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார் சிங்கமுத்து.

அதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்ததற்காக நடிகர் வடிவேலுவின் உருவ பொம்மையை தேமுதிகவினர் சிலர் திருச்செங்கோட்டில் எரித்தனர்.

சிங்கமுத்து...

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட உத்தமர்சிலி, பனையபுரம் இடங்களில் நேற்று இரவு 9 மணிக்கு பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

பிரச்சாரத்தின் போது அவர் நடிகர் வடிவேலுவையும், குஷ்புவையும் மோசமாக விமர்சித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் முதல்வர் கருணாநிதியைப் பற்றி பேச முற்பட்டார்.

அப்போது திமுகவைச்சேர்ந்த கலைச்செல்வன், "டேய் கலைஞரை பற்றி பேசுனா கொன்னுடுவேன். என்று சொல்லிவிட்டு கொடிக் கம்பத்தை பிடுங்கிக் கொண்டு சிங்கமுத்துவை அடிக்க வந்தார். அவருடன் மேலும் சில திமுகவினரும் வந்தனர்.

உடனே அதிமுகவினர் புடை சூழ அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் சிங்கமுத்து. அதன் பின்னர் அதிமுகவினர் கலைச்செல்வனை தாக்கினர். கலைச்செல்வனும் பதிலுக்கு தாக்கினார்.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. கலைச்செல்வன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவினர் ஸ்ரீரங்கம் தொகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடிவேலு பொம்மை...

இதே நேரம், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகர் வடிவேலுக்கு எதிராக திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்செங்கோடு - மௌசி பகுதியில் தேமுதிக தொண்டர்கள் ஆவேசத்துடன் வடிவேலுவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் வருவதற்குள் தேமுதிகவினர் ஓடிவிட்டனர்.


டிவி குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? சிந்தியுங்கள்-சிங்கமுத்து

டிவி குட்டி போடுமா அல்லது ஆடு குட்டி போடுமா என்று தேர்தல் பிரசாரத்தின்போது கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சிங்கமுத்து.

கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம், அரவக்குறிச்சி தொகுதியில் விஸ்வநாதபுரி, தண்ணீர்பந்தல், பவுத்திரம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழகத்தில் உள்ள மின்வெட்டு, விலைவாசி உயர்வு பிரச்சனைகளே திமுக ஆட்சியை அகற்றப் போதுமானவை. திமுக தேர்தல் அறிக்கையில் மிக்சி அல்லது கிரைண்டர் தருவதாக அறிவித்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் இவற்றை வைத்து என்ன செய்வது?

விவசாயிகளுக்கு தருவதாகச் சொன்ன 2 ஏக்கர் நிலம் தந்தபாடில்லை. இருக்கின்ற நிலத்தில் விவசாயம் செய்வதற்கு தண்ணீரும் கொடுக்கவில்லை.

ஏனென்றால் நிலத்தில் நல்ல விளைச்சல் இருந்தால், யாரும் விற்க முன்வரமாட்டார்கள். அதுவே தண்ணீர் இல்லாமல் நிலங்கள் எல்லாம் வறண்டுவிட்டால், வந்த விலைக்கு வாங்கலாம். அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று நல்ல லாபம் பார்க்கலாம் என்று செயல்படுகின்றனர்.

இலவச டிவி கொடுத்தோம், டிவி கொடுத்தோம் என்கிறார்களே, அதனால் என்ன பயன்? ஜெயலலிதா ஆடு தருவதாக அறிவித்துள்ளார். 'டிவி ' குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? என்பதை உணரந்து வாக்களிக்க வேண்டும்.

அன்மையில் திமுக எம்.பி.க்கள் கூட்டணிக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். இலங்கையில் தமிழ் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதைத் தடுப்பதற்காக ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார்.


'பேட்டி நடுவில் ஏன் நரகலை இழுக்கிறீங்க?' : சிங்கமுத்து பற்றி வடிவேலு..!

திமுகவுக்கு ஆதரவாகவும், தேமுதிக மற்றும் அதன் தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலு,

'தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளேன் இது எனக்கு கிடைத்த பெருமை' என தெரிவித்தார். மதுரையில் இது தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,

இந்த சிரிப்பலை கலைஞர் அவர்களை மீண்டும் முதல்வராக்கும் ஆதரவு அலையாக வீசுகிறது. மனிதருக்கு அடிப்படை தேவையான உண்ண உணவு, குடியிருக்க வீடு, உடுத்த உடை, இந்த மூன்றையும் கலைஞர் ஒரு சேர தருகிறார். கலைஞர் சொன்னா அது வரும். மத்தவங்க வரும்னு சொன்னா.... என்று நான் சொல்லி முடிப்பதற்கும், 'வராதுனு' மக்களே அதை திருப்பி சொல்றாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு கலைஞர் மேல அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருக்கு.

நான் ஆட்சிக்கு வந்தா பலசரக்கு வீடு தேடி வரும்னு சொல்லிட்டிருக்கிற விஜயகாந்த், இன்றைக்கு பிரச்சாரத்திறே பல சரக்குகளை அடிச்சிட்டு வர்றாரு. அவர் ஜெயலலிதாவுடன் இணைந்து ஒரே மேடையில் பேசினால் அவர்களுக்குள் பிரச்சினை தான் வரும் என்றார்.

உங்கள் பிரச்சாரத்தில் கல் வீசியிருக்கிறார்களே என ஒரு நிருபர் கேட்டதற்கு அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி கோட்டையில், தி.மு.க அணிக்கு ஏற்பட்டுள்ள ஆதரவு அலையை திசை திருப்பும் முயற்சியில் இப்படியெல்லாம் நடக்கு. எத்தனை கல்லடி வீசினாலும், என் சொல்லடியை தடுக்க முடியாது என்றார்.

நடிகர் சிங்கமுத்து பற்றி ஒருவர் கேட்க வர, சட்டென நிறுத்திய வடிவேலு 'பேட்டி நல்லா தானே போய்க்கிட்டு இருந்தது. திடீர்னு 'நரகலை' ஏன் இழுக்கிறீங்க... என்றார்.


பொய் பேசும் விஜயகாந்த்!

வேட்பாளரை அடித்துவிட்டு, அதைப் பற்றிக் கேட்டபோது அடித்ததை ஒப்புக் கொண்டு, என்னிடம் அடி வாங்கினால் மகாராஜா ஆவார்கள் என்று கூறிய தேமுதிக தலைவர் விஜய்காந்த், இப்போது 'பல்டி' அடித்துள்ளார்.

எனது உதவியாளரை தலையைப் பிடித்து உள்ளே தள்ளியதைத் தான் வேட்பாளரை அடித்தார் என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

என்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். என்னை பற்றி என்ன பிரச்சாரம் செய்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினால் செய்தால் எனக்கு சந்தோஷம் தான் என்றார்.

No comments: