Wednesday, April 6, 2011

இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும்: நாஞ்சில் சம்பத் பேச்சு.


நட்ட நடுநிசி விலகட்டும், இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் மதிமுக சார்பில் நேற்றிரவு இன்றைய சூழலில் தமிழ் சமுதாயம் ஆளுமை பெற்றிருக்கிறதா, அல்லது அடங்கியிருக்கிறதா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

நடுவராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் பேசியதாவது,

பிரதமர் மன்மோகன்சிங்கால் கொள்கை தலைவர் என பாராட்டப்பட்டவர் வைகோ. ஒரு ஆலை உரிமையாளரிடம் ரூ.1000 கோடி பெற்றுக் கொண்டு எங்களை ஜெயலலிதா புறக்கணித்தார்.

எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவரும், தென்மாவட்டங்களில் அதி்முகவை தூக்கி நிறுத்தியவருமான கருப்பசாமி பாண்டியன், கம்பம் செல்வேந்திரன், சாத்தூர் ராமசந்திரன், அழகு திருநாவுக்கரசு, முத்துசாமி, கரூர் சின்னசாமி, தாமரை கனி என உண்மையாக உழைத்தவர்களை தூக்கி எறிந்தார் ஜெயலலிதா.

இப்போது தினகரன், திவாகரன், சுதாகரன், பாஸ்கரனுக்கே அங்கு இடமில்லை. பின்னர் எங்களுக்கு எப்படி இடம் தருவார். ஜெயலலிதாவும், ராஜபக்சேவும் ஒரே கோட்டில் உள்ளவர்கள்.

வாக்காளர்கள் கரும்பு இருக்க இரும்பை தொடக் கூடாது. கனி இருக்க காயை விரும்பக் கூடாது. நட்ட நடுநிசி விலகட்டும், இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.


விஜயகாந்த் மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு
.

நாட்டை வழி நடத்த தகுதி இல்லாதவர் விஜயகாந்த். கட்சித் தலைவராக இருக்க விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை என, மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

கோவை அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஒரு புல் அடித்தால்தான் பாதியாவது பேச வரும் என்ற நிலையில் இருக்கும் விஜயகாந்த், ஒரு இயக்கத்தை வழி நடத்தவோ, நாட்டை வழி நடத்தவோ தகுதி அற்றவர். கட்சித் தலைவராக இருக்க விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை. அவரது நடவடிக்கைகள் மூலம் நாட்டு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்.

வைகோ கருப்பு துண்டு போட்டதால் அவரை கூட்டணியில் வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. கருப்பு ஜெயலலிதாவுக்கு ஒத்துக்கொள்ளாது என்றால் விஜயகாந்த் என்ன சிவப்பா.

அதிமுக அணியில் இருந்து எங்களை திட்டமிட்டு வெளியேற்றியவர்களுக்கு மதிமுகவினர் பதிலடி கொடுப்பார்கள். யாரை வீழ்த்த வேண்டும் என்பதில் எங்கள் தோழர்கள் தெளிவாக இருப்பார்கள். எங்களை இழந்ததால் யாருக்காவது இழப்பு ஏற்பட்டே தீரும் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும். யாரை வீழ்த்த வேண்டும் என்று மதிமுகவினருக்கு தெரியும். மனசாட்சிப்படி மதிமுகவினர் வாக்களிப்பார்கள் என்றார்.

1 comment:

Anonymous said...

அப்படி போடய்யா ! இப்பவாது புத்தி வந்த்தே. இலை கருகி மொட்டையன் சோ தலையில் விழுந்து மொட்டைத்தலை கருகட்டும். சூரியன் உதிக்கட்டும். தமிழ்நாட்டைப் பிடித்தபீடைகள் ஒழியட்டும்.