Friday, April 22, 2011

ஒபாமாவுக்கு மும்பை மருத்துவர் கண்டனம்.


மலிவான மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் செல்லாதீர்கள் என்று அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா பேசியிருப்பதற்கு பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமாகாந்த் பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள ஆசிய இதயவியல் கழகத்தின் தலைமை நிர்வாகியான பாண்டே, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்தவர்.

ஒபாமா பேசியிருப்பதற்கு தனது கருத்தை தெரிவித்துள்ள பாண்டே, ரூபாயைவிட டாலரின் மதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கிறதே தவிர, மருத்துவச் சிகிச்சையின் தரத்தில் எந்தவிதக் குறைவும் இல்லை. இந்திய டாக்டர்கள் சர்வதேச தரத்துக்கு இணையாக சிகிச்சை தருவதிலும், நோயைக் கண்டறிவதிலும் வல்லவர்கள்.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளில் 5% பேர்தான் அமெரிக்கர்கள். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும், வளைகுடா நாடுகள் உள்பட, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும்தான் அதிகம் பேர் வருகின்றனர். ஒபாமா எச்சரித்தாலும் சிகிச்சைக்காக அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு வருவது குறையாது என்றார்.

No comments: