Friday, April 22, 2011

சங்ககிரியில் ராணுவ வீரரை சுட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு.

ராணுவ வீரரை சுட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு

சங்ககிரியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ராணுவ வீரர் சுகுமார் சாதுகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அறிந்த சேலம் போலீஸ் கமிஷனரும், ஐ.ஜியுமான சுனில்குமார்சிங், சேலம் சரக டி.ஐ.ஜி. வெங்கட்ராமன், துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் மோகன்குமார், சங்ககிரி துணை கண்காணிப்பாளர் ராமசாமி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரித்தனர்.

ராணுவ வீரர் சுகுமார் சாதுகாவிடம் சரக டி.ஐ.ஜி.வெங்கட்ராமன் சிறிது நேரம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் அவர் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான தமிழக சிறப்பு காவல்படை போலீஸ்காரர் சண்டியான்(வயது 25) என்பவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவை போலீசார் உடனே கொண்டு சென்று சண்டியானிடம் வழங்கினர். இவரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் எப்படி நடந்தது என விசாரித்து வருகிறார்கள்.

No comments: