Wednesday, April 27, 2011

சத்ய சாய்பாபா உடல் அடக்கம்.


மறைந்த சத்ய சாய்பாபாவின் பூத உடல் பிரசாந்தி நிலையத்தில் அவர் பக்தர்களை சந்திக்கப் பயன்படுத்திய இடத்துக்கு வெகு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

முழு அரசு மரியாதையைத் தொடர்ந்து வேதிக சம்பிரதாயப்படி 'சாய்' மந்திரங்கள் முழங்க சாய்பாபாவின் சகோதரர் மகன் ஆர்.ஜே.ரத்னாகர் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அதன் பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆளுநர்கள் இ.எஸ்.எல். நரசிம்மன் மற்றும் சிவராஜ் வி.பாட்டீல், பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, வெங்கையா நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முன்ளாள் முதல்வர் அசோக் சவாண் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக ஏறக்குறைய ஒரு மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த கடந்த 2 நாட்களாக புட்டபர்த்திக்கு வந்தவண்ணம் இருந்தன

No comments: