Thursday, June 16, 2011

மாமூல் கேட்டு மிரட்டிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் .



சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் உள்ள கடைக்காரர்களிடம், எங்கள் ஆட்சி வந்து விட்டது, இனி மாமூலாக தினமும் 150 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மாமூல் கேட்டு மிரட்டிய அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு காவல்துறை யினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சேலம் அழகபுரத்தில், இருக்கும் அ.தி,மு.க ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு. இவர் ஒரு கொலை வழக்கில், நீதிமன்றத்தில் வாழ்நாள் தண்டனை பெற்று, பின்னர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து விடுதலை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த பொது தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சியில் மனு கொடுத்திருந்தார். ஆனால், சேலம் மேற்கு தொகுதிக்கு வெங்கடாசலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவருக்கு தேர்தல் செலவுக்கு ஒரு பெரிய தொகையை கொடுத்து உதவி செய்துள்ளார் .வெங்கடாசலம் எம்.எல்.ஏ ஆனதும், ராஜூ மாமூல் வசூல் செய்யும் வேலைகளை தன்னுடன் இருக்கும் ஆட்களை வைத்து செய்ய ஆரம்பித்து விட்டார் என்று அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து சேலம் மேற்கு தொகுதியில் உள்ள மாமாங்கம், வெள்ளக்கல் பட்டி, டைட்டல் பார்க் போன்ற இடங்களில் சட்டவிரோதமக சுண்ணாம்பு கல் கடத்தும் கும்பலிடமும், ஓமலூர் செல்லும் வழியில் உள்ள மாக்னசைட் தாது வெட்டி எடுக்கும் குத்தகைதாரர்களிடமும், ஆவின் பால் பண்ணையில் பால் எடுத்து வெளியூர் கொண்டு செல்லும் லாரி குத்தகைதாரர்களிடமும் குறிப்பிட்ட தொகையை மாமூலாக கேடு மிரட்டியும் உள்ளர் . இன்னும் சேலம் அழகாபுரம், காவல் நிலையம் எதிரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான ஆறு கடைகளையும் வாடகைக்கு எடுத்துள்ள கடைக்காரகளிடம் சென்று மாமூல் கொடு, அல்லது கடையை காலி செய் என்பது போன்று இன்னும் பல இடங்களில் அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்..

இது குறித்து உள்ளூர் பத்திரிகைகளில் உழவர் சந்தையில் மாமூல் கேட்ட செய்தி வந்ததும், உழவர் சந்தைக்கு வந்த தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வெங்கடாசலம் ரௌடிகளுக்கு யாரும் மாமூல் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி தனது விசிடிங்கார்டுகளை வியாபாரிகளிடம் கொடுத்து யாராவது மாமூல் கேட்டல் எனக்கு போன் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தார். அதை தொடர்ந்து ஏ.வி.ராஜு, எம்.எல்.ஏ. வெங்கடசலத்தின் கூட்டு மிரட்டல் பற்றிய விவரங்களை சென்னைக்கு அனுப்பியது சேலம் உளவுத்துறை.

எங்கள் ஆட்சி வந்து விட்டது, இனி மாமூலாக தினமும் 150 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ஏ.வி.ராஜு மிரட்டியதாக, பேர்லேண்ட்சில் ஓட்டல் கடை நடத்தி வரும் சத்யா பேர்லேண்ட்ஸ் போலீசில் புகார் செய்தார். இது குறித்து 3பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதே போல் சூரமங்கலம் உழவர் சந்தையில் கடை வைத்திருக்கும் ஈஸ்வரி, மற்றும் சுரேஷ் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் காவல்துறையினர், 15.06.2011 அன்று அதிகாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்த ஏ.வி.ராஜுவை தூக்கி கொண்டு போய் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளது.

சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடாசலத்துக்கு 15.06.2011 அன்று மாலை மூன்று மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு வரும்படி வந்த உத்தரவையடுத்து அலறியடித்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார்.

No comments: