Thursday, June 16, 2011

காய்கறி விலைகள் “கிடுகிடு” உயர்வு.



காய்கறிகளின் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளது. கூடவே கருணாநிதி தான் வீட்டுக்குப் போயாச்சே பின்னே ஏன் விலை ஏறுது? என்கிற நியாயமான கேள்வியும் எழத்தான் செய்கிறது.

இதோ விலை உயர்ந்த காய்கறிகளின் பட்டியலைப் பாருங்கள்.

பீன்ஸ்- ரூ. 50, அவரைக்காய்- ரூ. 40, கேரட்- ரூ. 30, வெண்டைக்காய்- ரூ. 30

கத்தரிக்காய்- ரூ. 24, தக்காளி- ரூ. 10, பீட்ரூட்- ரூ. 18, நூல்கோல்- ரூ. 28

சவ்சவ்- ரூ. 20, சேப்பங்கிழங்கு- ரூ. 26, சேனை கிழங்கு- ரூ. 32

பிடி கருணை- ரூ.32, மிளகாய்- ரூ. 24, பாகற்காய்- ரூ. 24, கீரை- ரூ. 5

புடலங்காய்- ரூ. 10, உருளைக்கிழங்கு- ரூ. 18, வாழைக்காய்- ரூ. 5

முருங்கைக்காய்-1 ரூ. 4, முட்டைக்கோஸ்- ரூ. 5 வெங்காயம்- ரூ. 15

இதில் வருகிற 16ந்தேதி முதல் டீசல் விலை ஏறப்போகிறது என்னும் அறிவிப்பு வேறு.

இந்த அறிவிப்பால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? விலைவாசி எங்கு போய்நிற்குமோ? தெரியவில்லை.

அண்மையில் டெல்லி சென்ற அம்மையார், பிரதமரிடமாகட்டும், பத்திரிகை, ஊடகத்தினரிடமாகட்டும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்தும், விலைவாசி ஏற்றம் குறித்தும் பேசாதது ஏன்?

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து திமுக ஆட்சிகாலத்தில் கருத்து தெரிவிக்கையில், மாநில அரசின் வரியினைக் குறைத்து விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைக்க யோசனை கூறிய ஜெயலலிதா, தமது ஆட்சியில் இன்னும் இதை நடைமுறைப் படுத்தாதது ஏன்?

No comments: