Thursday, June 16, 2011

ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தொழிற்சாலையில்    பயங்கர தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூரில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பல்வேறு பிரிவுகளுடன் செயல்படும் இந்த தொழிற் சாலையில் பெயிண்ட் பிரிவில் இன்று காலை 11 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கட்டிடத்தில் 3 ஆயிரம் லிட்டருக்கு மேல் பெயிண்ட் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததால் சிறிது நேரத் திற்குள் தீ மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரு தீயணைப்பு வண்டியில் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. கட்டிடம் முழுக்க தீ பரவியது. சுமார் 30 அடி உயரத்துக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீகட்டுக்குள் வராததால் பூந்தமல்லி, காஞ்சீபுரம் தீயணைப்பு நிலையங் களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை முற்றிலும் அணைத்தால்தான் தொழிலாளர்கள் யாராவது அதில் சிக்கி உள்ளனரா? என்பது தெரியவரும். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

No comments: