Thursday, June 16, 2011

மனிதநேய அறக்கட்டளை நடத்தும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு.

மனிதநேய அறக்கட்டளை நடத்தும்  ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு;  12 இடங்களில் நுழைவுத்தேர்வு

சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகத்தின் இயக்குனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை சி.ஐ.டி. நகரில் செயல்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதேநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம் 2012-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ். முதல்நிலைத்தேர்வுக்கு 10 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இந்த இலவச பயிற்சிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களை தேர்வு செய்வதற்காக தமிழகத்தில் உள்ள 12 மாவட்ட தலை நகரங்களில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும்.

சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் நுழைவுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் 17-ந் தேதி நடத்தப்படும்.தேர்வுக்கான பாடத்திட்டத்தை மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கல்வியகத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான என்.சி.ஆர்.டி. பாடப்புத்தகங்கள், டாட்டா மெக்ரா ஹில், ஜெனரல் ஸ்டடீஸ் மேனுவல் புத்தகங்கள், பொது அறிவு, நடப்புகால நிகழ்ச்சிகள், (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) மற்றும் லாஜிக் ரீசனிங், குவான்டிடேட்டில் ஆப்டி டியூட் மற்றும் இங்கிலீஷ் காம்ப்ரிகென்ஷன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருக்கும்.

இந்த இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதள பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் நுழைவுத்தேர்வுக்கு மீண்டும் விண்ணபிக்க வேண்டும், விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 10-ந் தேதி. விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் ஜூலை 12-ந் தேதிக்கு பிறகு நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை மேற்கண்ட இணையதளத்தில் டவுண்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம். அதில் தாங்கள் பாஸ்போர்ட் அளவு போட்டோவை ஒட்டி அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். இதுதான் ஹால்டிக்கெட்.

நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். கடந்த 12-ந் தேதி ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு எழுதிய மையத்தில் பயிற்சிபெற்ற மாணவர்களுக்கான மெயின் தேர்வு பயிற்சி வகுப்புகள் வருகின்ற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொடங்க உள்ளது.

இந்த வகுப்பு செப்டம்பர் மாதம் இறுதி வாரம் வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு, மையத்தில், பிற புதிய மாணவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் ஹால்டிக்கெட், போட்டோ, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு கார்த்திகேயன் கூறி உள்ளார்.

No comments: