Wednesday, May 4, 2011

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ மரணம் - விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு.


அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூ சென்ற ஹெலிகாப்டர் தவாங்கில் விபத்துக்குள்ளானது என்றும், அந்த இடத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி கந்து (56), மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தவாங் பகுதியில் இருந்து தலைநகர் இடா நகருக்கு கடந்த சனிக்கிழமை காலை 9.50 மணிக்கு தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவருடன் எம்எல்ஏவின் சகோதரி மற்றும் அதிகாரிகள் உள்பட 4 பேர் சென்றனர். 20 நிமிடத்துக்கு பிறகு ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களாக அவரைத் தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் இன்று அவரது ஹெலிகாப்டர் ஜாங் அருவிப்பகுதியில் விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விபத்தில் டோர்ஜி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புக் குழுவினர்கள் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: