Wednesday, May 4, 2011

பின்லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து 2 தடவை தகவல் கொடுத்த இந்திய உளவுத்துறை ; அமெரிக்கா அலட்சியம் செய்தது.

பின்லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து    2 தடவை தகவல் கொடுத்த    இந்திய உளவுத்துறை;    அமெரிக்கா அலட்சியம் செய்தது

பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை அமெரிக்கா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தான் கண்டு பிடித்தது. ஆனால் அதற்கு முன்பே இந்தியா கண்டு பிடித்து 2 தடவை அமெரிக்காவுக்கு தகவல் சொன்னது. ஆனால் அவர்கள் இந்திய உளவுத்துறை தகவலை அலட்சியம் செய்து விட்டனர் என்று இப்போது தெரிய வந்துள்ளது.

முதலில் 2007-ம் ஆண்டு மத்தியில் இந்திய உளவுத்துறை பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை கண்டு பிடித்தது. அப்போது பெஷாவர் நகரில் தலிபான் தீவிரவாதிகள் கூட்டம் நடந்தது. இதில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனுக்கு அடுத்த இடத்தில் இருந்த தலைவரான அல் ஷ வாகிரி கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் அல்ஷவாகிரி இஸ்லாமாபாத் நகருக்கு வந்து அங்கிருந்து ஏதோ ஒரு இடத்துக்கு சென்றார்.

இதை இந்திய உளவுத்துறை தெரிந்து கொண்டது. அவர் இஸ்லாமாபாத்துக்கு பின்லேடனை சந்திப்பதற்காக தான் வந்து இருக்க வேண்டும் என்று இந்திய உளவுத்துறை கருதியது. எனவே பின்லேடன் இஸ்லாமாபாத் நகரத்துக்கு அருகில் தான் எங்கோ தங்கி இருக்கிறான். என உறுதி செய்த இந்திய உளவுத்துறை அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியது. ஆனால் இதை அமெரிக்கா கண்டு கொள்ளவே இல்லை.

அடுத்து 2008-ம் ஆண்டு இந்திய உளவுத்துறைக்கு இன்னொரு முக்கிய தகவல் கிடைத்தது. பின்லேடன் மிகவும் உடல் நலம் பாதித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையில் இருக்கிறார். அவருக்கு சாதாரண ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க முடியாது என்று தகவல் கிடைத்தது. எனவே பாகிஸ்தானில் ஏதேனும் பெரிய நகரில் அவர் தங்கியிருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று கருதினார்கள்.

மேலும் இதுபற்றி தகவல் திரட்டிய போது ராணுவ வீரர்கள் வசிக்கும் பகுதியில் தான் பின்லேடன் தங்கி இருக்கிறார் என்று தெரிய வந்தது. எனவே இதுபற்றியும் அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போதும் அமெரிக்கா அலட்சியப்படுத்தியது. பின்லேடன் எங்காவது மலை பகுதியில் அல்லது பழங்குடி மக்கள் கிராமத்தில் தான் வசிக்க வேண்டும் என்று அமெரிக்கா கடைசி வரை கருதியது.

எனவே இந்தியா சொன்னது போல அவர் நகர பகுதியில் தங்கி இருப்பார் என்பதை நம்பவில்லை. இதனால் தான் அலட்சியப்படுத்தி வந்தனர். கடைசியில் அவர் அபோதாபாத் நகரில் ராணுவ வீரர்கள் வசிக்கும் பகுதியிலேயே 5 ஆண்டுகளாக வசித்து வந்துது இப்போது உறுதியாகி உள்ளது.

No comments: