Wednesday, May 4, 2011

ஆபரேஷன் “ஜெரோனிமா” பெயர் உருவான கதை.

ஆபரேஷன் “ஜெரோனிமா” பெயர் உருவான கதை

பின்லேடன் மீது நடத்திய வேட்டைக்கு ஆபரேஷன் ஜெரோனிமா என்று பெயர் சூட்டி இருந்தனர். அதிபர் ஒபாமாதான் இந்த பெயரை தேர்வு செய்து இருந்தார்.

“ஜெரோனிமா” என்பது அமெரிக்காவை சேர்ந்த புரட்சி வீரனின் பெயர். ஜெரோனிமாவுக்கும் பின்லேடனுக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. பின்லேடனை போலவே ஜெரோனிமாவும் அமெரிக்காவின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியவன்.

அமெரிக்காவில் வெள்ளைகாரர்கள் குடியேறுவதற்கு முன்பு அங்கு ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களை கொன்று குவித்து விட்டுதான் வெள்ளைக்காரர்கள் குடியேறினார்கள். அவர்களில் தப்பி பிழைத்த மக்கள் ஆங்காங்கே வசித்து வந்தனர். அவர்களில் அபேச்சே எனும் ஒரு கூட்டத்தில் தலைவனாக இருந்தவன் ஜெரோனிமா.

1829-ம் ஆண்டு பிறந்த அவன் அமெரிக்காவுக்கு எதிரான பழங்குடி மக்களை திரட்டி அமெரிக்காவுக்கு எதிராக போராடினான். துப்பாக்கி படை ஒன்றை உருவாக்கி அமெரிக்காவுக்கே சிம்ம சொப்பனமாக இருந்தான். 5 ஆயிரம் பேர் கொண்ட அமெரிக்க படை அவனை பல ஆண்டுகளாக பிடிக்க முடியவில்லை.

மெக்சிகோ பகுதியில் உள்ள குகைகளுக்குள் பதுங்கி தப்பி வந்தான். கடைசியாக 1886-ம் ஆண்டு அமெரிக்க படை சுற்றி வளைத்தது அடுத்து சரண் அடைந்தான். பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவன் 1909-ம் ஆண்டு தனது 79 வயதில் மரணம் அடைந்தான்.

ஜெரோனிமா போலவே பின்லேடனும் அமெரிக்காவுக்கு தண்ணீ காட்டி வந்ததால் பின்லேடனை பிடிக்க நடத்திய இந்த வேட்டைக்கு ஜெரோனிமா பெயரை சூட்டினார்கள்.

No comments: