Wednesday, May 4, 2011

தாமதமாக வந்த கலெக்டரை கண்டித்த வேட்பாளர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் வாக்கு எண்ணிக்கைக்கான ஆலோசனைகள், கருத்துகள் பற்றி இன்று கலந்துரையாடலுக்காக வேட்பாளர்கள் வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு. ராஜேந்திரன் தகவல் அனுப்பியிருந்தார்.

அதன்படி மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வந்து காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாக மாவட்ட ஆட்சியர் வரவில்லை. மதியம் 11 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிர்மல் ஜோஷி குமாருடன் அரங்கிற்க்கு வந்து கூட்டத்தை தொடங்கினார்.

அப்போது கீ்ழ் பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஒரு சுயேட்சை வேட்பாளர் எழுந்து, எங்கள வரசொல்லிட்டு நீங்க ( கலெக்டர்) லேட்டா வந்தா என்ன அர்த்தம். எப்ப பாத்தாலும் நீங்க லேட்டாவே வர்றிங்க. எங்களுக்கென்ன வேற வேலை இல்லன்னு நினைக்கறிங்களா என எல்லோர் முன்பும் மைக்கில் கேள்வி கேட்க முகம் கருத்து விட்டது மாவட்ட ஆட்சியர்க்கு.

வேட்பாளரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குணிந்துக்கொண்டார். அந்த சுயேட்சை வேட்பாளர் மேலும் சங்கடப்படுத்தாமல் அமர்ந்துவிட்டார். அவரின் இந்த கேள்வி அங்கிருந்த அதகாரிகளை அதிர்ச்சியுற வைத்துவிட்டது. இருந்தும் அவரின் கேள்வியில் நியாயம்மிருந்தததால் அதிகாரிகள் அவரை மறைமுகமாக பாராட்டினர்.

No comments: