Tuesday, April 5, 2011

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சங்ககரா விலகல்.


இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சங்ககரா விலகல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் இலங்கை தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் சங்ககரா ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இருப்பினும் இலங்கை கிரிக்கெட் வாரியம் விரும்பினால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரையில், நடைபெற இருக்கிற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் உடனான டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பதவியில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதியான கேப்டனை தேர்ந்தெடுத்து அவரை தயார் செய்வதற்கு தாம் பதவி விலகுவது வழி வகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments: