Tuesday, August 2, 2011

கடைகளில் பொருள் வாங்குவோருக்கு பாலித்தீன் பைகளை இலவசமாக கொடுக்க தடை.

கடைகளில் பொருள் வாங்குவோருக்கு  பாலித்தீன் பைகளை இலவசமாக கொடுக்க தடை: கட்டணம் வசூலிக்க முடிவு

கடைகளில் பொருட்களை வாங்குவோருக்கு தற்போது பாலித்தீன் பைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த பாலித்தீன் பைகளுக்கு கட்டணம் வசூலித்தால், வாடிக்கையாளர்களே வீட்டில் இருந்து பை கொண்டு வந்து பொருட்களை வாங்குவார்கள். இதனால் பாலித்தீன் பைகளின் பயன்பாடு குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

எனவே, கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பாலித்தீன் பைகளை கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த மாதம் 1-ந் தேதி இது அமலுக்கு வந்தது. பெங்களூரில் கடந்த வாரம் அமலுக்கு வந்தது. நாளை (புதன்கிழமை) முதல் நாடுமுழுவதும் இலவச பாலித்தீன் வழங்குவதை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பைகள் தயாரிப்புக்கான விதிமுறைகள் மத்திய வன பாதுகாப்புத்துறை மூலம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில் கடைகளில் இலவசமாக பாலித்தீன் பைகளை வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடைக்காரர்கள் வழங்கும் பைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் விலையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

60 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று கவர்னர் உரையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. என்றாலும் பைகளுக்கான விலை இதுவரை நிர்ணயிக்கப்பட வில்லை.


No comments: