Tuesday, August 2, 2011

ஜெயலலிதாவை அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின் ஆவேசம்.



பூண்டி கலைவாணனை கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்புகிறார்கள். அப்படியானால், ஜெயலலிதா செய்த குற்றத்துக்கு அவரை அந்தமான் சிறைக்கல்லவா அனுப்ப வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள துணை முதல்வர் மு.க..ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதே கூட்டத்தில் அவர், “பூண்டி கலைவாணன் மீது என்ன வழக்கு? சமச்சீர் கல்வி அமல்படுத்தக் கோரி திருவாரூர் பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விஜய் என்ற மாணவன் அதில் பங்கேற்று பஸ்சில் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தான். தகவல் அறிந்த கலைவாணன் விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இதுதான் அவர் செய்த தவறு.

மாணவன் சாவுக்கு அவர்தான் காரணம் என்று போலீசார் கைது செய்ய வந்தார்கள். எப்.ஐ.ஆர். அல்லது வாரண்ட் இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்றார்கள். அதைக் கொண்டு வாருங்கள் என்றதும் எங்களை சாலையில் வைத்து கைது செய்துவிட்டு, நாங்கள் சாலை மறியல் செய்ததாக கூறினார்கள். பிறகு எப்.ஐ.ஆர். கொண்டு வந்து தந்து கலைவாணனை அழைத்துச் சென்றனர்.

ஒரு மாணவனை பள்ளி செல்ல விடாமல் தடுத்ததாக கூறி வழக்கு போட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறார்கள் என்றால், சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் 1.40 கோடி மாணவர்களின் படிப்பை பாழாக்கிய ஜெயலலிதாவை எந்த சிறையில் அடைப்பது? அந்தமான் சிறையில்தான் அடைக்க வேண்டும்” என்றும் பேசினார்.

“தி.மு.க. முன்னோடிகள்மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகிறார்கள். தகுந்த ஆதாரம், சான்று இருந்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கட்டும். தண்டனையை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் பொய் வழக்கு போடுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” இவ்வாறு மு.க..ஸ்டாலின் ஆவேசப்பட்டார்.

No comments: