Tuesday, August 2, 2011

76 ஆயிரம் பி.இ. இடங்கள் காலி : என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு 20 ஆயிரம் பேர் வரவில்லை.

76 ஆயிரம் இடங்கள் காலி: என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு 20 ஆயிரம் பேர் வரவில்லை

பி.இ. படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. பொது பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கி வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு புதிதாக 29 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை 500-யை தாண்டி விட்டது. இவற்றின் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1 லட்சத்து 47,732 கிடைக்கின்றன.

இதுவரை நடந்த கலந்தாய்வின் மூலம் 71,138 பேர் பல்வேறு பாடப் பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர். 19,549 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. 208 பேர் இடங்களை தேர்வு செய்வதை தவிர்த்து விட்டனர்.

76,594 பொறியியல் “சீட்” இன்னும் காலியாக இருக்கின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் காலி இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சுமார் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முதல் கட்டம் முடிந்த ஒரு சில நாட்களில் இரண்டாவது கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. அது முடிந்தவுடன் துணை கவுன்சிலிங் நடக்கிறது. பிளஸ்-2 சிறப்பு தேர்வு எழுதியவர்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்படும். அதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. 5-ந்தேதிக்குள் உடனடி தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments: