Tuesday, August 2, 2011

இந்தியாவில் பால் பற்றாக்குறை ஏற்படும் : நிபுணர்கள் எச்சரிக்கை.

இந்தியாவில் பால் பற்றாக்குறை ஏற்படும்:நிபுணர்கள் எச்சரிக்கை

உலகிலேயே அதிகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால், தேவை அதிகரிப்பு காரணமாகவும், அதிக பால் கொடுக்கும் பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் பால் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

இந்திய கால்நடை கவுன்சில் சார்பில் சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப் பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கவுன்சிலின் தலைவர் நாராயணன் மெகந்தி கூறியதாவது:-

இந்தியாவில் ஆண்டுக்கு 35 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் பாலின் தேவை 60 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள பசுக்களிடம் பால் உற்பத்தி திறன் மிகவும் குறைவாக உள்ளது. கால்நடைகளுக்கு தரமான உணவு கிடைப்பதில்லை. சரியான நேரத்தில் பராமரிப்பும், சிகிச்சைகளும் அளிக்கப் படுவதில்லை.

பால் உற்பத்தியை பெருக்க நீண்ட கால திட்டம் எதுவும் கிடையாது. இன்னும் 2 ஆண்டுகளில் கால்நடைகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக போய் விடும். இதனால் பால் பற்றாக்குறை ஏற்பட்டு, வெளி நாடுகளில் இருந்து இறக்கு மதி செய்ய வேண்டிய நிலை உருவாகும். எனவே கால் நடைகளின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, பால்உற்பத்தியில் தமிழ்நாடு பின்தங்கி உள்ளது. தனிநபர்களுக்கு பால் கிடைப்பதில் அகில இந்திய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம் கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு ஒருவருக்கு 52 முட்டைகள் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இதன் சராசரி 160 ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: