Monday, August 15, 2011

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் துணிகர கொள்ளை.



உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் கொள்ளையர்கள் தங்களை கைவரிசையை காட்டியுள்ளனர். சுதந்திர தினத்தன்று உள்துறை அமைச்சர் வீட்டில் நடந்துள்ள இந்த கொள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ளது. அந்த வீட்டில் கொள்ளையர்கள் தங்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். அந்த வீட்டில் உள்ள 6 அறைகளை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். இதில் 3 அறைகள் ப.சிதம்பரத்திற்கு சொந்தமானவை ஆகும்.

உள்துறை அமைச்சரின் வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் குடும்பத்தின் பூர்வீகநகைகள் அந்தஅறைகளில் வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

1 comment:

M.Mani said...

எத்தனுக்கு எத்தன்?