Monday, August 15, 2011

அரிய வகை குரங்குகள் கண்டுபிடிப்பு - படம் .





நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலையின் மேல் இருக்கிறது திருமலைநம்பி கோயில். அங்கே சில நாட்களுக்கு முன்பு குரங்குகள் கூட்டம் கூட்டமாக திரிந்தன. இந்த குரங்குகளின் முகம் கருப்பாகவும், வால் மிகவும் நீளமாகவும் காணப்பட்டது. சாதாரண குரங்குகளைவிட இதன் உருவம் நீளமாகவும் உள்ளது.

இதனை ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அதிசயத்துடன் பார்த்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் சொல்லுவது அரிய வகையான இந்த குரங்குகள் மலையின் மீது உள்ள அடர்ந்த காட்டில் மட்டுமே வசிக்கும். தற்போது ஒரு சில குரங்குகள் திசை மாறி மலையடிவாரத்தில் சுற்றித்திரந்தன. இப்போது அந்த இனத்தில் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த குரங்கு தொடர்பாக ஆய்வு நடத்தினர். இந்த வகை குரங்குகள் களக்காடு புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில்தான் அரிதாக வசிக்கின்றன என தெரிவித்துவிட்டு போனார்கள்.

No comments: