Tuesday, July 26, 2011

மன அமைதி... நிம்மதி ! , விருஷ்டிராசனம், சம கோணாசனம்.

மன அமைதி... நிம்மதி !

மன அமைதி... நிம்மதி!

இன்றைய அவசர உலகில் பெருகிவரும் பரபரப்பு, பதட்டம் அதனால் ஏற்படும் மனக்கவலைகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை எல்லாம் அதிகமான மனபாரத்தை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன.

அப்படி ஏற்படும் மன இறுக்கத்தை தளர்த்தி மன அமைதி பெறும் வழிகளை இங்கே பார்ப்போம். முதலாவதாக உடல் மற்றும் உள்ளத்தை தளர்த்தி ஆழமாக சுவாசிக்க வேண்டும். மூச்சை உள்வாங்கி, பின்னர் மெதுவாக வெளியிடுவதும் முக்கியமானது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மனதையும், உடலையும் தளர்த்தி ஓய்வு எடுப்பது அவசியம். அதேபோல் நாம் எப்போதும் செய்யும் வேலையை விட்டுவிட்டு, மாறுபட்ட நமக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு வேலையை செய்வதும், அல்லது அதைப்பற்றி தெரிந்து கொள்வதும் மனதை நிம்மதியாக்கும்.

தோட்ட வேலை செய்தல், புத்தகம் அல்லது பத்திரிகை வாசித்தல், விளையாடுதல் ஆகியவற்றை பொழுது போக்காக செய்தால் உடல் புத்துணர்வாகி, மனம் அமைதி பெறும். தினமும் குறிப்பிட்ட நேரம் யோகாசனம் செய்தால் ரத்த அழுத்தம் குறைந்து, மன அழுத்தமும் குறைகிறது.

ஆனால் யோகாசனம் செய்பவர்களுக்கு எவ்வித கெட்டப் பழக்கமும் இருக்கக் கூடாது. மதுவகைகள், புகை பிடித்தல், புகையிலை பழக்கம் ஆகியவற்றை தொடவே கூடாது. அதேபோல் உணவு முறையில் கட்டப்பாடு இருந்தால் மட்டுமே ரத்த அழுத்தம் சீராகும்.

யோகாசனம் செய்வதற்கு முன்பு, மனதில் அச்சம், பீதி, படபடப்பு, மன இறுக்கம் போன்றவை மனதுக்குள் வைத்திருக்கக் கூடாது. யோகாசனத்தை காலையில் செய்வது அவசியம். அப்படி தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால் கண்டிப்பாக மனம் நிம்மதி அடையும்.


விருஷ்டிராசனம்.
விருஷ்டிராசனம்

செய்முறை:

சமகோணாசனத்தில் இருந்து மூச்சை வெளியே விட்டபடி கீழே குனிந்து கைகளை பின்னால் நேராக கால்களை கீழாக நீட்டவும். ஓய்வெடுத்து திருப்பச் செய்யவும்.

பலன்கள்:

கால் தசைகள் அதீத பலம் பெறுகின்றன. முதுகு எலும்புகள் நெகிழ்வு பெற்று முதுகு வலி போன்ற வியாதிகள் அகல்கின்றது. மார்பு நன்றாக விரிவடைவதால் இதயம் பலம் பெறுகின்றது. சீறுநீரக உறுப்புகள் பலம் பெறும். ஹெர்னியா நீங்கும்.


சம கோணாசனம்.
சம கோணாசனம்

செய்முறை:

பல நாட்கள் முதல் நிலை ஆசனத்தை பயின்ற பின் இரண்டாவது நிலையினை ஆரம்பிக்கவும். முதலில் பரிபூர்ண நிலையினை எய்த முடியாது. கால்களையும் இந்த அளவிற்கு விரிக்க இயலாது. முதலில் முடிந்த அளவு செய்து மூச்சை வெளியே விட்டு உங்களால் முடிந்தளவு கீழே குனியுங்கள்.

ஒரு மாத காலம் காலை, மாலை என இருவேளையும் தொடர்ந்து பயிற்சி செய்தீர்களேயானால் ஆசனம் சித்தியாகும். மூச்சை வெளியே விட்டபடி கால்களை அகற்றி இரு கைகளால் கால் கட்டைவிரலை பிடித்தபடி மேல் நெஞ்சினை தரையில் படும்படி வைத்து தலையை படத்தில் கண்டபடி வைக்கவும்.

20 எண்ணும் வரை இருந்து நிமிரும் போது மூச்சை இழுத்தபடியே நிமிரவும். 3முதல் 5 முறை செய்யவும்.

பலன்கள்:

கால் தசைகள் பலம் பெறுகின்றன. முதுகெலும்புகள் நெகிழ்வு பெற்று முதுகு வலி போன்ற வியாதிகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். மார்பு நான்கு விரிவடைந்து ஆழ்ந்த சுவாசம் கிடைப்பதால் இதயம் மகத்தான பலன் பெறுகின்றது.

No comments: