Tuesday, July 26, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரம் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும். - நீதிமன்றத்தில் ராசா வாதம்.


டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தான் ஒப்புதல் அளித்தார். பிரதமரின் முன்னிலையில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்று நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கூறிய முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார்.

நான் பிரதமரையோ ப.சிதம்பரத்தையோ குற்றம் சாட்டவில்லை, பிரதமரை விசாரிக்க வேண்டும் என்றும் கூறவில்லை. நான் கூறாத விஷயங்களை நான் கூறியதாக மீடியாக்கள் தான் தவறான செய்திகள் வெளியிட்டுவிட்டன என்று ராசா இன்று பல்டி வாதம் செய்தார்.

அதே நேரத்தில் டிபி ரியாலிட்டி நிறுவன பங்குகள் விற்பனைக்கு ஒப்புதல் அளித்தவர் என்ற முறையில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும். அவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியளிக்க வேண்டும் என்றும் ராசா கூறியுள்ளார்.

பிரதமர் விஷயத்தில் தனது நிலையை ராசா மாற்றிக் கொண்டுள்ளார்.

No comments: