Wednesday, July 6, 2011

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள கறுப்பு பண முதலைகளின் பெயர்களை வெளியிட வேண்டும் ; லாலுபிரசாத் கோரிக்கை.

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள கறுப்பு பண முதலைகளின் பெயர்களை வெளியிட வேண்டும்;லாலுபிரசாத் கோரிக்கை


ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் 14-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித்தலைவர் லாலுபிரசாத் யாதவ், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள அனைத்து இந்தியர்களின் பெயர்களையும் மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அந்த பணம், ஏழைகளின் பணம். எனவே, அந்த பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்து, ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். முதலில் பணம் வரட்டும். அதன்பிறகு, அதை எப்படி பிரித்து அளிப்பது என்று கொள்கை வகுக்கலாம்.

மெட்ரிக் வகுப்புகள்வரை, குழந்தைகளுக்கு தேர்வுகள் நடத்தக்கூடாது. ஏனென்றால், உயர் கல்வியில் சேருவதற்கான தகுதி மதிப்பெண் அதிகமாக இருப்பதால், ஏழை மாணவர்களும், பின்தங்கிய மாணவர்களும் உயர் கல்வியில் சேர முடியாமல் போய்விடும். டெல்லியில் சில கல்லூரிகளில் கட்-ஆப் மதிப்பெண் 100 ஆக உள்ளது. ஏழை குழந்தைகள் எப்படி மற்றவர்களுடன் போட்டியிட்டு, அந்த கல்லூரிகளில் சேர முடியும்? பீகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கே இல்லை.

மின்சாரம் வாங்குவது என்ற பெயரில், முதல்-மந்திரி நிதிஷ்குமார், வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மத்திய மின்தொகுப்புக்கு பணம் செலுத்தினால், எவ்வளவு மின்சாரம் வேண்டுமானாலும் கிடைக்கும். எனவே, மக்களை முட்டாள் ஆக்க வேண்டாம்.

இவ்வாறு லாலு கூறினார்.

No comments: