
தமிழ்நாட்டில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1653 எம்.பி.பி. எஸ். இடங்களுக்கும், முதல் கட்ட கலந்தாய்வு 1-ந்தேதி தொடங்கி இன்று வரை நடந்தது.
9 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 670 இடங்களுக்கும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 இடங்களுக்கும், இந்த மாத இறுதியில் கலந்தாய்வு நடைபெறும்.
ஏற்கனவே ஓ.சி., பி.சி., எம்.பி.சி., பி.சி. முஸ்லிம் ஆகிய பிரிவினருக்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இன்று எஸ்.சி., எஸ்.டி., எஸ்.டி - அருந்ததி பிரிவினருக்கான கவுன்சிலிங்கும் முடிந்து விட்டது. மொத்தமுள்ள 1653 இடங்களும் நிரம்பி விட்டன.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரிகள் வருகிற 22-ந்தேதி திறக்கப்படுகிறது. கலந்தாய்வில் ஒதுக்கீட்டு கடிதங்கள் பெற்ற மாணவ - மாணவிகள் அந்தந்த கல்லூரிகளில் சேருவார்கள்.
சிலர் சேராமல் போவதால் ஏற்படும் காலி இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள், பல் மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள், 2-வது கட்ட கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெறும்.
No comments:
Post a Comment