Saturday, July 30, 2011

கியாஸ் விலை உயர்வுக்கு இந்தியா - சீனா காரணம் ; ஒபாமா குற்றச்சாட்டு.

அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்: கியாஸ் விலை உயர்வுக்கு    இந்தியா-சீனா காரணம்;    ஒபாமா குற்றச்சாட்டு

கியாஸ் விலை உயர்வுக்கு இந்தியா- சீனாதான் காரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார். எரிபொருள் வருகிற 2025-ம் ஆண்டில் அமெரிக்க வாகனங்களில் எரி பொருள் பயன்பாடு திறன் ஊக்குவிப்பு திட்டம் தொடக்க விழா வாஷிங்டனில் நடந்தது. அதில் அதிபர் ஒபாமா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த பல ஆண்டுகளாக எரிபொருள் விலை உயர்வால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளே காரணமாகும். ஏனெனில், அங்கு அதிக அளவில் எரிபொருள் பயன் படுத்தப்படுகிறது. அந்த நாடுகளில் தேவை அதிகரிப்பால்தான் அமெரிக்காவில் கியாஸ் விலை அதிகரித்துள்ளது. எனவே 2012 முதல் 2016-ம் ஆண்டிற்குள் குறைந்த அளவு எரிபொருள் கியாஸ் மூலம் அதிக தூரம் ஓடக் கூடிய கார்கள் மற்றும் எடை குறைந்த சரக்கு ஏற்றும் வாகனங்களை தயாரிக்கும்படி கம்பெனிகளுடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

போர்டு, ஜி.எம்., ஹோண்டா, ஹீண்டாய், டொயோடா உள்ளிட்ட முக்கிய கம்பெனிகளுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இக்கம் பெனிகள் தயாரிக்கும் 90 சதவீத வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனை ஆகின்றன. வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணை அளவை குறைப்பதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.

No comments: