Saturday, July 30, 2011

வீரபாண்டி ஆறுமுகம் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.



காவல் நிலையத்துக்கு கையெழுத்து போடச் சென்ற வீரபாண்டி ஆறுமுகத்தை மீண்டும் கைது செய்தனர் போலீசார்.

30.07.2011 அன்று காலை 8 மணிக்கு குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கையொப்பம் இடச் சென்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்த சேலம் போலீசார் அவரை கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர் மீது இன்னொரு நிலப்பறிப்பு வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கே நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments: