Thursday, June 9, 2011

ராணுவ வீரர்களிடம் பெண்களை கற்பழிக்க உத்தரவிட்ட கடாபி.

ராணுவ வீரர்களிடம் பெண்களை கற்பழிக்க உத்தரவிட்ட கடாபி;  ஆதாரம் இருப்பதாக சர்வதேச கோர்ட்டு தகவல்

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக ஒரு பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது ராணுவம் அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில் ராணுவத்தினர் பெண்களை கற்பழிப்பதாக புகார் கூறப்பட்டது.

ஆனால் இப்போது பெண்களை கற்பழிக்கும்படி ராணுவத்தினருக்கு அதிபர் கடாபியே உத்தரவிட்டது தெரிய வந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக சர்வதேச கிரிமினல் கோர்ட்டு தலைவர் லூயிஸ் மொரைனோ தெரிவித்துள்ளார்.எனவே இதன் அடிப்படையில் கடாபி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

பெண்களை கற்பழிப்பதற்காக ராணுவ வீரர்களுக்கு வயகரா போன்ற சென்ஸ் வீரிய மருந்துகளை கொடுக்கவும் கடாபி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே சர்வதேச கோர்ட்டில் கடாபியை நிறுத்தி விசாரணை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

ஏற்கனவே கடாபி போர் குற்றங்களில் ஈடுபடுவதாக கூறி சர்வதேச கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. கடாபி இதுவரை 700 பேரை கொன்று இருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

No comments: