Tuesday, June 21, 2011

பள்ளிக் கல்வி தேர்வுத்துறை இயக்குநரை கைது செய்ய சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு !

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் 2008ஆம் ஆண்டு சங்ககிரி அருகே உள்ள ரவீந்திரநாத் தாகூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

ராஜேஸ்வரியின் +2 மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அரசு தேர்வு துறை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். மதிப்பெண் சான்றிதழை சரிபார்த்த உயர்நீதிமன்றம் +2 தேர்வில் வெற்றி பெற்றது செல்லும் என்றும், ராஜேஸ்வரி இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வை எழுத அனுமதிக்கும்படியும் அரசு தேர்வுதுறை இயக்குநருக்கு உத்தரவிட்டது.

அதன்படி 2008ஆம் ஆண்டு தேர்வு எழுதிய ராஜேஸ்வரி தேர்ச்சி பெற்றார். ஆனால் ராஜேஸ்வரிக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் வழங்காமல் அரசு தேர்வு துறை இயக்குநரகம் இழுத்தடித்தது.

இந்நிலையில் சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தனக்கு சான்றிதழை பெற்றுத் தரும்படி ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தார். ஜூன் மாதம் 16ஆம் தேதிக்குள் ராஜேஸ்வரிக்கு சான்றிதழும், வழக்கு செலவு தொகை 6 ஆயிரம் ரூபாயும், அரசு தேர்வு துறை உடனடியாக வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனாலும் அரசு தேர்வு துறை இயக்கநர் அலுவலகம் அவருக்கு சான்றிதழும், 6 ஆயிரம் ரூபாய் அபராத தொகையும் கொடுக்காததால் அரசு தேர்வு துறை இயக்குநரை கைது செய்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துமாறு சேலம் நுகர்வோர் மன்ற நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

மதுரை சரவணன் said...

seithi puthithaaka irukkirathu... pakirvukku vaalththukkal