Tuesday, June 21, 2011

பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு விவகாரம்.


மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இருக்கிறார். டெல்லியில் பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் அலுவலகங்கள் அமைந்துள்ள வடக்கு பிளாக்கில் பிரணாப் முகர்ஜியின் நிதி அமைச்சக அலுவலகம் அமைந்துள்ளது.

நிதியமைச்சக பிரிவில் உள்ள பிரணாப் அமரும் அலுவலக அறை, அவரது தனி உதவியாளரின் சேம்பர், அவரது செயலாளரின் அறை, 2 கான்பரன்ஸ் அறைகள் ஆகியவற்றி்ல் உளவு முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது., மத்திய அரசின் உளவுத்துறையினர் ஒட்டுக்கேட்பு கருவிகளை பொருத்தி ரகசியமாக கண்காணித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர்,

உளவுத்துறையினர் ரகசியமாக கண்காணித்ததை ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளை உளவுத் துறையினர் கண்காணித்தது உண்மை. ஆனால், அந்த ரகசிய கண்காணிப்பு மூலமாக எதையுமே அவர்கள் கண்டு பிடிக்கவில்லை'' என்றார்.

நிதிஅமைச்சரின் அலுவலகம் கண்காணிக்கப்பட்ட விவகாரம் மிகவும் முக்கியமானது என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

No comments: