Tuesday, June 21, 2011

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது : பிரதமருக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம்!..கடிதம்!..கடிதம்!..

தமிழக மீனவர்கள்  23  பேர்  கைது:பிரதமருக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம்

கச்சத்தீவு அருகே நேற்று நள்ளிரவு மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கொண்டு சென்றனர். தமிழக மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரியும், இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்கள் கவலை அளிக்கிறது என்றும், தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படியும் கடிதம் அனுப்பி உள்ளார் .

கருணாநிதி கடிதம் எழுதுவதை ஒவ்வொரு தடவையும் ஜெயலலிதா கிண்டல் செய்வார். இப்போது அவரும் அதைத்தான் செய்கிறார்.

கடிதம் எழுதுவது கண் துடைப்பு செயல் என்பதை கடந்த ஆட்சியில் தெளிவாக மக்கள் கண்டுவிட்டார்கள். இதை உணர்த்திய பெருமைக்குரியவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா தான்.

எனவே கடிதம் எழுதாமல் உடனடியாக பிரதமரை தொடர்பு கொண்டு இப்பிரச்சனை முடிவுக்கு கொண்டுவந்தால் உண்மையாகவே புரட்சியாளராக ஜெயலலிதாவைப் பார்க்கலாம்.

No comments: