Saturday, June 11, 2011

ரூ.7,877.82 கோடி லாபம் ஈட்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.


தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) சாலை அமைக்கும் திட்டப் பணிகளை தனியாருக்கு அளித்ததன் மூலம் ரூ. 823.50 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கான அனுமதியை அளித்ததன் மூலம் இத்தொகை ஈட்டப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை திட்டப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு அளிப்பதன் மூலம் ஆணையத்தின் செலவு குறைந்து வருமானம் அதிகரித்துள்ளது.

அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் இதுபோல திட்டப் பணிகளை தனியாருக்கு அளிப்பதன் மூலம் ரூ. 31,352 கோடியை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரையில் ஈட்டப்பட்ட தொகையின் மதிப்ப ரூ. 7,877.82 கோடியாகும்.

No comments: