Monday, June 13, 2011

ஜெர்மனியில் பீன்ஸ் மூலம் பரவிய “இ.கோலி” நோய்: சாவு 35 ஆக உயர்வு.

ஜெர்மனியில் பீன்ஸ் மூலம் பரவிய “இ.கோலி” நோய்: சாவு 35 ஆக உயர்வு

ஜெர்மனியில் “இ.கோலி” பாக்டீரியா மூலம் வயிற்று போக்கு நோய் பரவி வருகிறது. இந்த நோயினால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர்.

சமீபகாலம் வரை இந்த நோய்க்கு 31 பேர் பலியாகி இருந்தனர். தற்போது சாவு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காயில் இருந்து “இ.கோலி” நோய் பரவியதாக கூறப்பட்டது. பின்னர் கோழிக்கறி மூலம் பரவியதாக நிபுணர்கள் கூறினர். தற்போது இந்த நோய் பீன்ஸ் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் “இ.கோலி” பாக்டீரியா கிருமி பாதிக்கப்பட்ட 2 பெண்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சமீபத்தில் அவர்கள் சாப்பிட்ட பீன்ஸ் மூலம் “இ.கோலி” தாக்கியது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பீன்ஸ் வாங்கிய இடம் குறித்து விசாரித்தபோது வடபகுதியில் உள்ள பண்ணையில் விளைவிக்கப்பட்டது தெரிய வந்தது.

உடனே அதிகாரிகள் அந்த பண்ணையை முழுமையாக மூடி “சீல்” வைத்தனர். அங்குள்ள “இ.கோலி” பாக்டீரியாவை முழுமையாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு “இ.கோலி” பாக்டீரியா வந்தது எப்படி என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த பண்ணையில் இருந்து காய்கறி வினியோகம் செய்யப்படும் இடங்களுக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை பரிசோதித்து வருகின்றனர். இந்த தகவலை ஜெர்மனி நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments: